ரே சார்லஸ்-இன் இனப்பற்றும் தமிழக அரசியவாதிகளின் பணப்பற்றும்!

ரே..இதான் படத்தின் பேரு.

ஒரு அமெரிக்க கறுப்பினத்தவரான மியூசிஸியன்- ரே சார்லஸ் ஐ பற்றிய பதிவு.

இது பட விமர்சனம் அல்ல.ஏனெனில் ISO தர பட விமர்சகர்கள் இங்கு உலவும் பலர் மாதிரி என்னால் பட விமர்சனங்களை அவ்வளவு சுவைபட தரமுடியாது.

இது சாதாரண திரைப்படம் போலல்லாமல் ரே-வின் வாழ்க்கையையே பதிவாக எடுத்திருக்கிறார்கள் சுவராஸ்யமாய் மற்றும் உண்மையாகவும்!

இப்படத்தில் வரும் ஒரு காட்சியை மட்டும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.
ரே சார்லஸ் என்கிற அந்த கருப்பு இசை மேதை அமெரிக்காவில் மிக மிக பிரபலமாகிக்கொண்டிருந்த நேரமது!
அவரின் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியும் அமெரிக்கா மட்டுமன்று உலகமெங்கும் விரும்ப பட்டு வந்த காலம்.

அச்சமயத்தில்தான் ஜியார்ஜியா-வில் அவரின் நிகழ்ச்சியை ஒரு வெள்ளைக்காரர் ஏற்பாடு செய்திருதார்.
அதன்படி ரே-வும் சொன்ன நேரத்திற்கு ஜியார்ஜியா சென்றார்.


அங்கு அவருக்கு எதிராக ஒரு கறுப்பின கூட்டமே அவரை எதிர்த்து கோஷமிட்டுக்கொண்டிருந்தது!
விஷயம் என்னவென்றால் ரே பாடப்போகும் அந்த நிகழ்ச்சியானது வெள்ளைக்காரர்களால் வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமே சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ரே ..கறுப்பினத்தவர்களின் எதிர்ப்புகளையும் மீறி உள்ளே செல்ல முயலும் போது,,ஒரு கறுப்பின இளைஞ்சன் சொன்ன வர்ர்த்தைகளுக்கு கட்டுப்பாட்டு நின்றார்.

ஒரு கருப்பினத்தை சேர்ந்த ஒருவன்,,,,,வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் பிரத்யோகமாய் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றினால் அது நம் இனத்தை நாமே தரம் தாழ்த்துவதற்கு சமமதானால் நீங்கள் இந்நிகழ்ச்சியை நடத்தகூடாதேன்றும் நம் இனத்தை சேர்ந்த நீங்களே நம்மினத்திற்கு துரோகம் செய்யலாமா என்றும் வினவிய போதுதான் தான் எப்பேர்பட்ட துரோகம் செய்யவிருப்பதை உணர்ந்தார்


இதனால் என்ன ஆனாலும் பரவாயில்லையென்று நினைத்து உடனே அந்நிகழ்ச்சியை ரத்து செய்து,கறுப்பினத்தவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். நிறவெறி கொண்ட வெள்ளைக்காரர்களை வெறுப்பில் ஆற்றினார்

பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்,தம்மினமே தமக்கு சிறந்தது என்று நினைத்து இந்த முடிவினை அவர் எடுத்தால் அவருக்கு ஜியார்ஜியாவில் உள்நுழைய தடை விதித்து அந்த மாகாண கவர்னர் அறிவித்தார்

இந்த தடை முப்பது ஆண்டுகள் நீடித்தது.

நிறவெறி அடங்கும் காலகட்டத்தில் ஜியார்ஜியா மாகாண கவர்னர் அவரை பழைய சம்பவங்களை மறந்து மீண்டும் ஒரு இசை கச்சேரியினை நடத்த வேண்டினார்.

அதற்கிணங்க அவர் புகழ்பெற்ற "ஜியார்ஜியா" என்ற பாடலை பாடி கறுப்பினத்தவர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

சாகும் வரை அவர் அவரின் இனத்திற்கு பல கொடைகளையும் காலத்தினால் அழியாத இசைகளை இவ்வுலகத்திற்கும் அளித்தார் என்றால் அது மிகையாகாது.

முப்பது வருடத்திற்கு பின் அவர் அரங்கேற்றிய அந்த பாடலை நீங்கள் இங்கே கேட்டு மகிழலாம்.




இதுவரை படித்த நீங்கள் இந்த பதிவின் முதல் பாதியான "ரே வின் இனப்பற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இரண்டாவது பாதியான "நம்மினத்தை பற்றிய கவலையே இல்லாத தமிழக அரசியல்வாதிகளின் பணப்பற்றை" பற்றி நான் பதிவு போட்டுத்தான் நீங்க தெரிஞ்சிக்குனுமா என்ன? ஹி ஹி!


Read more...

காந்தியும் செகுவரோவும்!

இன்னைக்கு லஞ்ச் டைம்-ல ஒரு கேள்வி கேட்டேன்! எல்லாரும் சாப்பிடுவதை நிறுத்திட்டு என்னைய பார்த்து தெரியலன்னு பதில் சொன்னாங்க.

ஆனாலும் நான் விடுவதாயில்லை.உங்களுக்கெல்லாம் வழக்கம் போல மூணு சான்ஸ் தரேன்...இப்பவாச்சும் பதில் சொல்லுங்க பார்க்கலாம் என்றதும் ஆர்வமாயினர்.

என்ன சுத்தி மொத்தம் ஆறு பேர். ஆப்சன்-னா நம்மாளுங்களுக்கு அல்வா மாதிரி... சும்மா ரௌண்டு கட்டி அவனவன் அடிச்சு விட்டாங்க. ஆனா எல்லார் விடையுமே தவறாயிருந்தது.

இதுல என்ன ஆச்சரியமான விசயம்னா அதிகம் பேர் கெஸ் பண்ணது சுபாஷ் சந்திர போஸையும் நம்ம காந்தி தாத்தாவையும் தான்.
ஆனா என்ன பண்றது விடை தப்பாச்சே!




அப்படி என்னதான் கேள்வி கேட்டேன்னு கேக்கிறீங்களா?
அதை தெரிஞ்சிகிரதுக்கு அப்படியே என்னோட மூணு மாசம் பின்னோக்கி நகரணும்.


கண்ணு மண்ணு தெரியாம தமிழ் வலைபூக்களின் பால் ஆர்வம் வந்த ஆரம்ப சமயத்தில் ஏதோ ஒரு வலைப்பூவில் பார்த்த வரிகள் அப்படியே பசக்குன்னு மனசுல ஒட்டிக்கிச்சி.

"உன் முன் நடக்கும் அநியாயங்களை பார்த்து உன் ரத்தம் கொதித்தால் நீயும் என் தோழனே!"

அது என்னமோ தெரியல இந்த சொற்தொடர் ரொம்ப கம்பீரமா ...ரொம்ப பிடிச்சிருந்தது!

இப்ப அப்படியே நிகழ காலத்திற்கு வாங்க.

இந்த வசனத்தைதான் சொல்லி இத யார் சொல்லி இருப்பாங்கன்னு கேட்டதுக்குதான் எல்லாரும் முதல்ல மண்டைய ஆட்டி தெரியலன்னாங்க.

கெஸ் பண்ணுங்கன்னு சொன்னதும் அதிகப்படியானோர் போஸையும் ,காந்தியையும் சொன்னாங்க.

எல்லார் விடையும் தப்புன்னு சொன்னதும் அவனவன் ரொம்ப ஆவலாக "சரி சரி சீக்கிரம் சொல்லுங்க அத யார் சொல்லியிருப்பாங்கன்னு?" அப்படின்னு கொடைய ஆரம்பிச்சுட்டாங்க.



மிக அமைதியாக "அந்த சொற்களுக்கு சொந்தக்காரர் சேகுவேரா" அப்படின்னு சொன்னதும் எல்லோரும் ஒரே குரலில் அப்படி ஒரு ஆளா? எங்களுக்கு இதுவரை தெரியாதே" அப்படின்னு கேட்டாங்க.

சேகுவேரா யாருன்னு தெரியாம விட மாட்டானுங்கன்னு தெரிந்து விட்டது.
ஆஹா..ஆட்டம் முடிஞ்சிருச்சின்னு பார்த்தா ...ஆரம்பமே இதான் போலருக்கேன்னு நினைச்சிகிட்டேன்.



நானும் உங்கள மாதிரிதான். எனக்கும் இதுக்கு மேல தெரியாது. வேணும்னா போய் ஸ்கூல்-ல ஹிஸ்டரிய மறுபடியும் படிங்கன்னு சொன்னேன்.
டக்குனு ஒருத்தன் சொன்னான் " இதுவரைக்கும் நான் ஸ்கூல்-ல இவரை பற்றி படிச்சதே இல்லன்னு".


அட ஆமா ..நானும் ஸ்கூல்-ல படிச்சா மாதிரி நியாபகமே இல்லையேன்னு எனக்கும் அப்பதான் தோணிற்று.

ஒருவேளை தமிழனாய் இருப்பதினால் நமக்கு குறைந்த பட்சம் இவர் பெயராவது தெரிந்திருக்குமோ!

"சரி சரி ..என்ன இப்போ ஸ்கூல்-ல படிக்கலன்ன என்ன? எல்லாரும் கூகிள்-ல போய் தேடுங்கடா"ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்

ஆனாலும் மக்களே ஸ்கூல் ஹிஸ்டரியில சேகுவேராவை பற்றி பாடங்கள் ஏன் இல்லை என்று யாருக்காவது தெரியுமா?



குறிப்பு: சேகுவேராவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.அதற்கான சுட்டிகள் இருப்பின் சுட்டிகாட்டவும்.நன்றி!


பின் குறிப்பு: அன்றைய மாலை நேரத்தில் எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு.

"மச்சி ...நீ மத்தியானம் செகுவாராவை பற்றி சொன்னே இல்லை....அவரு பெரிய ஆள் போல இருக்குடா.....ஹி ஈஸ் ரியலி க்ரேட்டு தெரியுமா?...
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான எல்லா வரலாற்று புத்தகங்களிலும் காந்திய பத்தி படிக்கிறாங்க ..இதுவரை எனக்கு தெரிஞ்சி ஒருத்தன் கூட காந்தியா மாறல .. செகுவாராவை பத்தி ஒரு வரி கூட பாட புத்தகங்களில் இல்ல ஆனா எத்தனையோ பேர் செகுவராகளாக இருக்கிறார்களே எப்படிடா?"

என்று அவன் சொல்லிகொண்டிருக்கும்போதே சிக்னல் இல்லாமல் லைன் கட் ஆகி விட்டது.


என்குறிப்பு : எளியவர்களை கண்டால் காந்தியாகவும் கொடியவர்களை கண்டால் செகுவேராவாகவும் எழுச்சி அடைவதே இக்காலத்தில் சால சிறந்தது.
என்ன சொல்றீங்க தோழர்களே?

Read more...

அவனா நீ? (அறிஞ்சிக்கோ; தெரிஞ்சிக்கோ; பிழைத்துப்போ!)



யாராவது தங்களுக்கு ஏற்கனவே கெடுதல் செய்தவர்களை பார்த்தால் " அடப்பாவி அவனா நீ?" என்று சொல்லி ஒண்ணு சண்டைக்கு போவாங்க இல்லனா இவன் சங்காத்தமே வேணாமுன்னு விலகிப்போவாங்க!
அந்தமாதிரி "china made" அப்படின்னாலே அவனா நீ? அப்படின்னு எல்லா நாட்டுக்காரனும் தூர போறாங்க.
ஏன்னா சமிபத்திய சைனா பால் பொருட்களில் உள்ள நஞ்சினால்.ஊர்பட்டவங்களுக்கு கிட்னியில கல்லு வந்ததுதான் அதும் குறிப்பாக சீனாவின் பிஞ்சு குழந்தைகளுக்கு!

சீனா-வில் தயாரான பால் பொருட்களில் நச்சு கலந்து இருந்ததினால் ஏற்பட்ட விளைவுகளை இந்த உலகமே அறியும்.

இந்தியா உட்பட பல நாடுகளும் சீனா-வில் தயாரான உணவு பொருட்களை இறக்குமதி செய்வதை சில காலங்களுக்கு தடை செய்துள்ளது.

அப்படி உள்ள இந்த நிலையில் சில சீனா தயாரிப்பாளர்கள் தங்களின் தயாரிப்பு பொருட்களின் மேல் "மேட் இன் சைனா" என்று குறிப்பிடாமல் தயாரித்து வருவதால் நமக்கு தெரியாமலேயே அந்த பொருட்களை நாம் உபயோகிக்க வாய்ப்புகள் இருக்கிறது . (எப்படித்தான் இறக்குமதி ஆகுதுன்னே தெரியல !)

அந்த மாதிரி சமயங்களில் அந்த பொருளின் மேலுள்ள barcode எண்ணினை வைத்து நாம், எந்த நாட்டில் தயாரான பொருள் என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம் .

barcode-இன் முதல் மூன்று இலக்கங்கள் அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்ற விபரத்தினை தெரிவிக்க வேண்டும்.
அந்த வகையில் கீழுள்ள அட்டவணையினை பார்த்தும் மற்றும் இங்கு கொடுக்கப்பட்ட ஒரு உதாரணத்தை பார்த்தும் நாம் இந்த செய்தியை தெரிந்து கொண்டு நமையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துகொள்ள வேண்டும்

00-13: USA & Canada

20-29: In-Store Functions
30-37: France

40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta

539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 - 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

china : 690, 691, 692


உதாரணம்:-


தைவான்-இல் தயாரிக்கப்பட்ட பொருளின் barcode கீழ் கண்டவாறு இருக்கும்.




நோக்க: இலக்கம் 471 தைவானை குறிக்கும்.

இந்த மாதிரி சைனா-வில் தயாரான பொருட்களின் பார் கோடின் மேல் 690 அல்லது 691 அல்லது 692 இந்த மூன்றில் ஏதாவது ஒன்று ஆரம்ப இலக்கங்களாக இருக்கும்

புரிஞ்சிதா?

அறிஞ்சிக்கோ; தெரிஞ்சிக்கோ; பிழைத்துப்போ!

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP