3,426,247 மட முட்டா ***********!!


ஒரு திட்டு

ஏண்டா ..உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா ??
மனித நேயம்ன்னா என்னான்னு தெரியுமாடா ?
எப்பிடிடா நீங்கள்லாம் தமிழ்நாட்டில இருக்கீங்க?
இவ்வளவு நடந்தும் இந்த மாதிரி பண்ண உங்களுக்கு எப்பிடிடா மனசு வந்தது .....
ச்சே ..என்னை பொறுத்தவரை நீங்கெல்லாம் மனித இனமே கிடையாது ..



நான் ஏன் இப்படி மனசு பொறுக்காம திட்டிக்கிட்டு இருக்கேன்னு புரியாதவங்களுக்கு ஒரு சின்ன விசயத்தை சொல்லிடறேன் ..

தமிழ்நாட்டில் காங்கிரஸ் க்கு ஒட்டு போட்டவங்க மொத்த எண்ணிக்கை 3,426,247

இப்ப சொல்லுங்க ...! தலைப்பில் இருக்கும் “***********” இடத்தில என்ன கெட்ட வார்த்தையை போடலாம் ?
















Thx wiki !! (for the above info)

ஒரு நன்றி

காங்கிரஸ் கட்சியை படு தோல்வி அடைய வைத்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் உளமாற நன்றி கூறி கொள்கிறேன் ...

முக்கியமாக டங்குவாலுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியினை தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

சீமான் விரும்பியதை, வைகோ- செய்ய நினைத்ததை, காங்கிரஸ் கட்சியை வெறுக்கும் லட்சகணக்கானோறால் செய்ய முனைந்ததை சுலபமாக தன் “திரு விளையாடலால்” காங்கிரசின் சமாதிக்கு திறப்பு விழா நடாத்தி காட்டிய அசகாய சூரன் .. தமிழ்நாட்டின் ஒரிஜினல் கை’புள்ள... டங்குவிற்கு பல கோடி நன்றிகள் ...

ஆனா தல ..உங்க கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்விய கேக்கனும்னு ஆச தல....

“நீ பண்றதெல்லாம் தெரிஞ்சி தான் பண்றயா ..இல்ல தெரியாம பண்ணி இப்படி ஆயிடுதா ?”
எது எப்படியோ நீ ..அப்படியே மெயின்டைன் பண்ணு தல...

குறிப்பு : டங்குவை தலை என்று அழைத்ததிற்கும் அவருடைய மண்டைக்கும் யாரும் முடிச்சு போட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.







ஒரு குவிஸ்

ஸ்கூல் பக்கத்தில ஸ்டேஸனரி கடை வைக்கலாம் ..
டாஸ்மாக் பக்கத்தில ஊறுகாய் கடை வைக்கலாம்
சத்தியமூர்த்தி பவன் பக்கத்தில் என்ன கடை வைக்கலாம் ??


.
.
.
.
.
..

ஹி ஹி ...
வேட்டி கடை வைக்கலாம் ...
(எப்படியும் ஒருத்தன் வேட்டிய இன்னொருத்தன் உருவுவான் ...)

ஒரு செய்தி :-

ரஜினிதான் மருத்துவமனையில் இருக்காருன்னு பார்த்தா செந்திலும் ஜாயின் பண்ணிட்டாரு (மூலமாம்!)... சீக்கிரம் நலமடைய வேண்டுகிறேன் ..

நல்லவேளை கவுண்டமணி –செந்தில் ஜோடி இப்போதெல்லாம் நடிப்பதில்லை...கவுண்டமணி பின்னாடியே ஒரு உதை உதைத்தாருன்னா செந்தில் கதி என்னாவறது ???
(இலவச அறுவை சிகிச்சை ??)


ஒரு மகிழ்ச்சி

ஜாதியை ஒட்டு வங்கியாக நினைத்தவர்களை பேதி கண்டு ஓட விட்ட தமிழ்நாட்டு மக்களை நினைத்து ஒரு மகிழ்ச்சி...







ஒரு வாழ்த்து

வாழ்த்துக்கள்..




2009 ல வீல் சேரு மூடிகிட்டு இருந்ததால்தான் நாங்க தேடி வந்து உங்களுக்கு முடி சூடி விட்டிருக்கோம் ...ப்ளீஸ் கடுப்பேத்திறாதீங்க ..உங்களுக்கு கோடி புண்ணியம்...


ஒரு வேண்டுகோள்

சீமான் சார் ... சீக்கிரம் அரசியலுக்கு வந்துருங்க ..... உங்கள மட்டும்தான் நம்ப வேண்டி இருக்கு ..இல்லனா யாரு எப்ப வேண்டுமானாலும் காங்கிரஸ் கூட கூட்டு வச்சிருவாங்களோன்னு பயம் இருந்திட்டே இருக்கு







Please do the needful asap.






Thanks & Best regards,







ஆபீஸ்ல அதிகமா மெயில் அடிச்சா இப்படித்தான் பெஸ்ட் ரிகார்ட்ஸ் முடியுது ..







ஒரு அன்பளிப்பு

ஆங் .... டங்கு செய்த அரிய சேவையை பாராட்டி அவருக்கு “கை கழுவும் சங்கத்தின் “ சார்பில் இத்தாலிக்கு ஒரு ப்ரீ டிக்கெட் பார்செலெய் ........................

ஹி ஹி ..for your kinf info “ஒன் வே டிக்கெட் ...”மட்டும் தரப்படும் ...




எப்போ போறீங்கன்னு சொன்னா நான் பிச்சை எடுத்தாவது அனுப்பி வச்சிடுறேன் ...












ta ta bye bye டங்கு !








Read more...

மயிற்றிற்கும் உதவா தள்ளக்கை

திருக்குறள் பற்றி அறியாதோர் யாருமிலர். திருக்குறள் ஈரடி வெண்பா வகை சார்ந்த நூல். வெண்பாவின் இலக்கணப்படி ஈரடி கொண்டிருக்கும் பாக்கள் ஈரடி வெண்பா அல்லது குறள் பா என்றழைக்கப்படும்.
ஈரடி வெண்பா இலக்கணப்படி பல நூல்கள் பல கால கட்டத்தில் பலரால் இயற்றப்பட்டாலும் வள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் மட்டுமே காலத்தையும் வென்று நிற்கிறது. (ஔவை குறள், ஞானக்குறள்,, மேலும் பல ....குறள் வெண்பாக்களால் ஆனவையே )

திருக்குறளுக்கு நிகரான நூல் இதுவரை இயற்றப்பட்டதில்லை என அறுதியாக கூறலாம்.

ஒரு வட மொழி சொல் கூட கலக்காமல் முற்றிலும் தூய தமிழ் சொற்களை கொண்டே இயற்றபட்டதும் மேலும் தமிழின் முதல உயிர் எழுத்தான அகரத்தில் ஆரம்பித்து இறுதி மெய் எழுத்தான "ன்" னில் முடிவதும் இதன் சிறப்பு.



சரி ..இப்பதான் நாம இப்பதிவின் தலைப்பிற்கு வரோம்...

கோபம்,எரிச்சல், பயம், கொலைவெறி இதெல்லாம் ஒரு சேர எப்ப வரும் தெரியுமா ... எப்பப்பெல்லாம் எவனாவது காங்கிரஸ் பத்தி உயர்வா பேசினான் அப்பப்பெல்லாம் இவை அனைத்தும் கலந்த பீலிங் தோன்றும் ..

இப்படிதான் பெட்ரோமாக்ஸ் மண்டையன் அறுபத்து மூன்று தொகுதிகளை சொன்னதும் ...திருவள்ளுவர் கிட்ட சாரி சொல்லிட்டு கோபாவேசமா ஈரடி வெண்பாக்களா எழுதினேன் சார்.. எதுகை மோனைகளோடு பெரும்பான்மையான இழிவார்த்தைகளுடன் படு பயங்கரமா இருந்தது .. (அவைகள் பதிவில் எழுத தகுதி இல்லாததால் பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்)...

ஏதோ கூடுமானவரை பிற மொழி சொற்களை தவிர்த்து தமிழில் நான் எழுதிய "அரசியல்வாதியியல்" அதிகாரத்தின் கீழ் பின் வரும் ஐந்து குறட்பாக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.




அரசியல்வாதியியல்

1 .

கொத்துக்குலை நெற்கதிர்போல் தோன்றுமே தேர்தலின்கண்
வெத்துப்பத ராகுமே பின்பு


நன்கு விளைந்த நெற்கதிர்களை போன்று பயன் தருவோர் போன்று மக்களிடையே மாயையினை தேர்தலின் போது உருவாக்கும் அரசியல்வாதிகள் பின்பு வெற்றுப்பதர் போல் பயனற்று இருப்பார்கள் என்பதே கருத்து.

2.

கைகூப்பி நாவசைப்பான் நைச்சியமா னவன்கூற்று
நீர்குமிழி எனக் கொள்


ஓட்டுக்காக கைகூப்புவான், நயமாக பேசுவான், வேண்டியவன் போல அநியாயத்திற்கு ஆக்டு கொடுப்பான் ஆனால் அவன் சொன்ன வாக்குறுதி அனைத்தும் நீரில் தோன்றும் நீர்குமிழி போன்றது என்று அறிந்து கொள்.


3.

குழைவான் குனிவான் அகலானென்பான் அனுகூலமாயின்
அகப்படான் பின்னைந்து வருடம்

குழைந்து பேசுவான், பணிவாக குனிவான், உன்னை விட்டு அகலாமல் இருப்பான் பின் அவனுடைய தேவை (ஓட்டு) பூர்த்தியான பின் ஐந்து வருடத்திற்கு அகப்படவே மாட்டான்


4.

பணங்காட்டுவான் பொருளாட்டுவான் ஓட்டிசைந் தனினும்
வேசித் தொழிலே நன்று

ஓட்டிற்காக பணத்தை காட்டுவான்,, இலவச பொருள்களை தருவான் அதைக் கொண்டு நீங்கள் ஓட்டு போடும் செயலானது வேசி தொழிலை விட கேவலமானது எனக்கொள்.




5.


சுயத்திற்கு போட்டாலும் சிற்றுதவியா குமெனவறிக
மயித்திற்கும் உதவா தள்ளக்கை


சுயேச்சைக்கு போடும் ஓட்டாவது சிறிதளவேனும் பயன் தரும் ஆனால் காங்கிரஸ்க்கு போடும் ஓட்டு மயித்திற்கும் உதவாது என அறிக.

(அள்ளைக்கை என்றால் காங்கிரஸ் என பொருள் கொள்க )











குறிப்பு : அல்லக்கைகளின் எதிர்ப்பு தொடரும் ..

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP