அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றுபவர்கள் கவனத்திற்கு..



ஊரு



விட்டு ஊரு போய் வேலை செய்பவர்களும் அடிக்கடி வீட்டை ( குடி இருக்கிற வீட்டை சொன்னேன் !) மாற்றுபவர்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை என்னவெனில் வசிப்பு சான்றிதழ் வாங்குவதுதான்.

வாடகை வீட்டில் இருந்தாலும் நிறைய பேர் "Rent Agreement" வாங்குவதில்லை.

காஸ் இணைப்பில் இருந்து இன்டர்நெட் இணைப்பு வரை எல்லாத்துக்கும் வசிப்பு சான்றிதழ் இருந்தாதான் கொடுப்பாங்க.

ஒரே இடத்தில இருப்பவர்கள் நிலைமை பரவாயில்லை ஆனா வருசத்துக்கு ஒரு வீட்டை மாத்தறவங்க பாடுதான் கஷ்டம்.

டிரைவிங் லைசென்சு, வோட்டர் ஐ டி இதெல்லாம் பெர்மனென்ட் ஆ குடி இருப்பவர்களுக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும் மற்றபடி பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணுவதில் இருந்து இன்னபிற சில அத்தியாவசிய தேவைகளுக்கு தற்போது குடி இருக்கும் வீட்டு முகவரி உடைய வசிபபு சான்றிதழ் இருந்தே ஆக கட்டாயம் நம்மில் பல பேருக்கு ஏற்பட்டிருக்கும்.

ஒவ்வொரு முறையும் வீட்டை மாற்றும்போழுதும் வசிப்பிட சான்றிதழ் மாற்றவேண்டிய பெரும் கொடுமையில் இருந்து நம்மளை எல்லாம் விடுவிக்க இந்தியன் போஸ்டல் டிபார்ட்மென்ட் புதுசா ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்

அதுக்கு பேருதான் இந்தியன் போஸ்டல் ஐ டி ப்ரூப் (Indian Postal ID Proof).

இதன் மூலம் நாம் ஏராளமான பயன்களை அடையலாம்.

கிட்டத்தட்ட இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வருட காலத்தில் செல்லுபடியாகும் உங்கள் முகவரி சான்று!
எதிர்காலத்தில் பல்வேறு நிறுவனங்களும் இதனை முறைபடுத்தப்பட்ட குறுகிய கால அடையாள அட்டையாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.(இந்தியா முழுதும் )

உங்கள் அருகாமையில் இருக்கும் தபால் நிலையத்திற்கு சென்று விசாரிப்பீர்களானால் மேலதிக தகவல்களை பெறலாம்.




எனக்கு தெரிந்த வரை இந்த தாபால் துறை அடையாள அட்டை ஆனது மூன்று வருடம் வரை செல்லுபடியாகும்.
அதற்குண்டான செலவு வெறும் இருநூற்று ஐம்பது ரூபாய்கள்.


மேலும் தெரிந்து கொள்ள

இங்கே க்ளிக்கவும்.


நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பேசி அனைவருக்கும் இதைப்பற்றி அறிய தாருங்கள்


நன்றி வணக்கம்.

Read more...

ஒரு லட்சம் ரூபாயை ஒரே இரவில் செலவு பண்ணுவது எப்படி?

ஒரே


நைட்டுல ஒரு லட்சம் ரூபாய செலவு பண்ண முடியுமா ? என்ற விவாதம் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏற்பட்டது.

விவாதம் சவாலாக உருவெடுத்ததும் அந்த சவாலை ஏற்றுகொண்டேன்.

"ஒரே நைட்டுல ஒரு லட்சம் ரூபாய செலவு பண்ணி காண்பிக்க வேண்டும்."

இதானே சவால்? என்றதும்

அனைவரும் "ஆமாம்" என்றனர்.

சொன்ன மாதிரியே நானும் ஒரு லட்சம் ரூபாய ஓவர் நைட்டுல செலவு பண்ணிட்டேன் !

(நம்புங்க மக்களே ..) Check the screenshots - பெயர் மற்றும் அக்கௌன்ட் நம்பர் அழித்துள்ளேன்).




நேத்து நைட்டு பேங்க் பேலன்சு:




இன்று காலை பேங்க் பேலன்சு:






எப்படி என்கிறீர்களா?

ரொம்ப சிம்பிள்..


























எங்கேங்கல்லாம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அங்கங்கல்லாம் திருப்பி கொடுத்து விட வேண்டும்.

அவ்வளவுதான்!


மேட்டர் ப்ப்பினிஷ் !! !!

( கஷ்டமாத்தான் இருக்கும் வேற வழி இல்லை!)





இதை கேட்டதும் என் நண்பன் சரவணன் இன்னொரு கோஸ்டி உடன் " ஒரே நைட்டுல அஞ்சு லட்சம் செலவு பண்ணி காண்பிக்கிறேன் ..உங்களால முடியுமா? " ன்னு
சவால் விட்டு கொண்டிருந்தார்........




சரவணா....சரிதானே?




Moral Of this Incident : பணம் நிலையற்றது ; ஒரே நைட்டுல லட்சாதிபதி கூட பிட்சாதிபதி ஆகலாம். பார்த்துக்குங்க மக்களே !

Read more...

கலி முத்திவிட்டது!



இடுகை அகற்றப்பட்டு விட்டது. மன்னிக்கவும் !!

Read more...

மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..

மாத
வருமானம் 1500 RM க்கு குறைவாக வருமானம் பெறும் நகர்ப்புறம் வசிக்கும் குடும்பங்களுக்கு அல்லது 1000 RM க்கு குறைவாக வருமானம் பெறும் கிராமப்புறத்தில் வசிக்கும் மலேசிய குடும்பங்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்தில் மலேசிய அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.


திட்டத்தின் பெயர் : e-kasih


பயன்கள் : நேர்காணல் முறையில் தகுதியுள்ள குடும்பங்கள் தேர்ந்தெடுககப்பட்டு பண உதவி மற்றும் தேவைப்படும் பிற உதவிகளும் கிடைக்கப்பெறும்.

அணுகும் முறை : ஆன் லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தை நாடலாம்.

https://www.ekasih.gov.my/Pages/default.aspx

மிக குறைந்த இந்திய குடும்பங்களே இதுவரை இவ்வகை திட்டத்தில் உள்ளன என்பதால் இதைப்பற்றிய விழிப்புணர்ச்சியை தேவையான மலேசிய தமிழ் குடும்பங்களுக்கு தெரிவிப்பது ஒவ்வொரு மலேசிய தமிழர்களின் கடமையாகும்.

நன்றி. வணக்கம்.


குறிப்பு :
இதைப்பற்றி அறியத்தந்த நண்பர் திரு.ஆராசாமி அவர்களுக்கு அன்பு கலந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

RM என்பது மலேசிய கரன்சியை குறிக்கும்




தெரிந்ததை அனைவரிடமும்
பகிர்வது இன்பம்!

Read more...

நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படும் போது ...(அனைவரிடமும் பகிரவேண்டிய விடயம்!)

நண்பர்களே
இன்று நான் அறிந்து கொண்ட ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நம் நாட்டில் எத்தனையோ ரத்த வங்கிகள் இருப்பினும் தேவைபடுவோர் அனைவருக்கும் சரியான நேரங்களில் இரத்தம் கிடைப்பதில்லை. இதை நாமும் பல்வேறு சமயங்களில் ஏதாவது ஒரு வகையில் கேள்வி பட்டிருப்போம்.

நோயாளிகளுக்கு இரத்தம் தேவை படும்பொழுது அருகாமையிலுள்ள இரத்த வங்கியை தொடர்பு கொள்வோம். இரத்த இருப்பு அங்கு இல்லை எனில் நமக்கு தெரிந்தவர்களிடமும் உறவினர்களிடமும் விசாரிப்போம்.


அந்த மாதிர்யான சமயங்களில் கீழே உள்ள விடயத்தையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.

1. 9600097000 என்ற எண்ணுக்கு "BLOOD <தேவைப்படும் இரத்த வகை> " SMS செய்யுங்கள்.

2. இரத்த வழங்கி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.
( இதுவும் இரத்த வங்கியிடம் இருந்து பெறப்படும் தகவல்தான்)

இது எங்கள் அலுவலகத்தில் மனித வள துறையில் இருந்த வந்த மின் மடல். (Forward mail)



மேலும் இதை பற்றிய நம்பகத்தன்மைக்கு கூகிள்-ல் SMS 9600097000 என்று தேடிய பொது இவ்விடயம் பல்வேறு இடங்களிலும் அதிகாரபூர்வமாக பகிரப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ஆகவே .. நண்பர்களே இன்று யாரோ ஒருவருக்கு தேவைப்படும் இந்த விடயம் நாளை உங்களுக்கே கூட உதவலாம் ..அதனால் தயை கூர்ந்து இந்த விடயத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்



Please Share this information
as many as Possible!



நன்றி வணக்கம் .

Read more...

உதார் விடும் - ரீடிப் - ஷாப்பிங் ! ..உஷார் மேட்டர்!!

நண்பர்களே
சமீபத்தில் "ரீடிப் - ஷாப்பிங்" இன் மூலமாக நான் பட்ட அவஸ்தையை உங்களுடன் பகிர்ந்தது கொள்கிறேன். ஏன்னா நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தா உங்களுக்கு நல்லது... அதான்!

ரீடிப் - ஷாப்பிங்-ல் வித விதமான ஐட்டங்களை ( அது இல்லீங்க !) ஜிகு ஜிகுன்னு விளம்பர படுத்தி ப்ரீயா டெலிவரி பண்றோம்னு ரெடிப் காரனுங்க ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிக்கிட்டு திரியிறானுங்க.

சரி ரொம்பதான் இணையத்தில் கூவராங்களேன்னு பொய் பார்த்தா .... ரொம்ப நல்லாத்தான் விளம்பரப்படுத்தி இருக்காங்க.

வடிவேல் பாணியில் "டெஸ்ட் வையுடா அவனுக்கு" அப்படின்னு உள்குரல் எழும்ப நாமளும் ரீடிப் - ஷாப்பிங்-ல் நமக்கு தேவையானது இருக்கான்னு புத்தக பிரிவில் தேடி பார்த்தேன்.

http://books.rediff.com/


எனக்கு தேவையான புக் ஒண்ணு என் கண்ணில் மாட்ட உடனே இணையத்தின் மூலம் ஆர்டர் புக் பண்ணியாயிற்று.








"கஷ்டம்"மர் கேர் க்கு போன் பண்ணி பணத்த எப்படி கட்டுவதுன்னு கேட்க ..அவங்களும் போன் லைனை வேற எங்கிட்டோ கனக்ட் பண்ண ஆடோமடிக் வாய்ஸ் மூலம் கேட்கும் கடன் அட்டை கேள்விகளுக்கு பதில் குடுத்தால் ..பினிஷ் !!
தேவையான பண பரிமாற்றம் எளிதில் அமைந்து விடும்.


(இந்த முறை பண பரிமாற்றத்திற்கு பெயர் என்னவோ சொன்னாங்க சரியா நினைவில்லை.. )


இன்னும் 45 நாளில் உங்களுக்கு புத்தகம் வந்து விடும் அப்படின்னு ஒரு மெயில் வந்தது.
விளம்பரம் பண்றது முப்பது நாள் ஆர்டர் பண்ண பிறகு 45 நாளா ? சிவனேன்னு காத்து கிடக்க வேண்டியது தான் என்று இருந்தேன்.


அப்பாடா ..ஒரு வழியா ரெடிப் காரனுக்கு டெஸ்ட் வச்சாச்சு இப்ப ரிசல்ட்டுக்குத்தான் வெயிட்டிங் அப்படின்னு ஹாய்யா இருந்தா புத்தகமும் வரல ஒன்னும் வரல ...

ஒரு மனுஷன் எத்தனை நாட்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருப்பதுன்னு ஆன்-லைன் ட்ரக்கிங் இல் பார்த்தா உங்க ஆர்டர் கான்செல் ஆகி ரொம்ப நாள் ஆயிடுச்சுன்னு பல்ல இளிக்குது.


வந்ததே ஒரு கோபம் .. காசையும் குடுத்துட்டு ஒரு மாசம் காலமும் ஆகி உங்க ஆர்டர் கான்செல் ன்னு தெரிஞ்சா எவ்வளவு கடுப்பு வரும்?



எனக்கும் அப்படி ஒரு கடுப்பு வந்து "கஷ்டம்"மர் கேர் க்கு போன் பண்ணி என்னடா இது உங்க கொடுமையான சிஸ்டம் ?

கேன்சல் பண்றதும் பண்றீங்க காசவாவது திருப்பி கொடுக்கலாம் இல்லையா என்று டெரரா கேட்டேன் ?


ரொம்ப கூலா "கஷ்டம்"மர் கேர் தம்பி சொன்னாரு ... அப்படியே நீங்க வெப்சைட் ல பார்த்தீங்கன்னு அதுக்குன்னே ஒரு போரம் இருக்கு ..அதை பில் அப் பண்ணி சுப்மிட் பண்ணிங்கன்னா .... அப்படின்னு சொல்லிட்டே போனாரு .


என்னடா உலகம் இது ??


காசு வாங்கரதுக்குன்னா பேயா அலையறானுங்க ...திருப்பி கொடுப்பதென்றால் நாயா ஓடறானுங்க !

காசும் வேணாம் கருமாந்திரமும் வேண்டாம்னு சொல்லி உங்க அராவடியை உலகத்துக்கே சொல்ல போறேன்னு சொன்னேன். (அதான் ப்லோக் இருக்கில்ல ?? )


"தவறுக்கு வருந்துகிறோம்னு சொல்லி நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு" கிளி அடிச்சா சாரி கிலி அடிச்சா மாதிரி சொன்னாரு.

போடாங்கன்னு.. போன வச்சுட்டேன் .

உடனே எனக்கு ஒரு மெயில் வந்தது... இன்னும் ரெண்டு நாளில் உங்கள் ரிக்வெஸ்ட் பிரசஸ் செய்யப்படும் அப்படின்னு.

அதையும் கீழே பாருங்க





இது ஒரு சாதரண ஆர்டர் மட்டுமே. இதுக்கே இப்படின்னா மிக முக்கியமான விலை அதிகமுள்ள பொருட்களை வாங்குபவர்கள் மிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது எனக்கு நேர்ந்த அனுபவம் மட்டுமே.. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

குறிப்பு : என்னை மாதிரி அப்பாவியாய் வேலை செய்யும் அந்த "கஷ்டம்"மர் கேர் தம்பியிடம் கடுமையாக பேசியதற்கு வருந்துகிறேன் ..அவர் என்ன செய்வார் ...அம்பை நொந்து என்ன பயன் ?





டைம் இருந்தா இதையும் படிச்சி பாருங்க :-

HDFC ல் லோன் வாங்க லோல் பட்டும் கிடைக்காம போனது எப்படி ?


32 GB Pen drive ஊத்திக்கிட்ட மேட்டர்

Read more...

உனக்கு எவ்வளவு அழுத்தம் இருந்தா ?

என்னடா
இவன் பதிவின் பேர "டெரரா" வச்சிருக்கானேன்னு படிக்க வந்திருக்கீங்களா ?
சும்மா பதிவின் தலைப்பு மட்டும்தான் அப்படி!


மேட்டரு என்னான்னா... சமீபத்துல நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு விசயத்த நான் உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.அவ்வளவுதான் ..அதுவும் அழுத்தம் சம்மந்தப்பட்டது !

****************************************

நாம நமக்கு உடம்பு சரியில்லாத பொழுதெல்லாம் டாக்டருக்கிட்ட போயிருப்போம்.
நமக்கு சின்ன பிரச்சினை இருந்தாலும் பெரிய பிரச்சினை இருந்தாலும்
டாக்டர் பண்ற முதல வேலை நம்ம நாடி துடிப்பை தான் செக் பண்ணுவாரு.

ஏனென்றால் நம்ம நாடி துடிப்பை வைத்தே நம்முடைய பாடி கண்டிஷன் ஐ ஓரளவு தெரிஞ்சுக்கலாம்.

அந்த காலத்துல நாடியை பார்த்தே நோய்களை கண்டு பிடித்து விடுவார்களாம்.

எந்த விதமான நோயினையும் சரியான முறையில் எதிர் நோக்க பொதுவாகவே இதய துடிப்பின் ரிதம் மற்றும் அழுத்தம் ஆகியவை அறியப்படவேண்டிய முக்கிய காரணிகள் ஆகும்.
****************************************
****************************************
தொடர்ந்த மன அழுத்தத்தின் காரணமாக நான் எனக்கு தெரிந்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றேன்.
இதயம் தாறு மாறா துடிப்பதாகவும் இரத்த அழுத்தம் சிறிது அதிகமாக இருப்பதாகவும் சொல்லி தற்போதைக்கு மருந்து தருவதாகவும் மேலும் மன இறுக்கத்தை தவிர்ப்பதற்காக யோகா மற்றும் பல பொழுதுபோக்கு (?) அம்சங்களில் மனதினை செலுத்துமாறு அறிவுரை கூறினார்.
சில சமயங்களில் மனது பட படப்பு ஏற்படும் பொழுது இதயம் சீராக துடிக்கிறதா இரத்த அழுத்தம் சரியான அளவில்தான் உள்ளதா என்ற சந்தேகம் அடிக்கடி வரும்.
அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு நாமே நம் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு எண்ணிக்கை ஆகியவை தெரிந்து கொண்டால் நல்லாருக்குமேன்னு தேடிய போது கிடைத்ததுதான் கீழே படத்தில் நீங்க பார்ப்பது.
தேடி பிடித்து அதை வாங்கி உபயோகித்து பார்த்தேன் .ரொம்ப சிம்புள் அண்ட் சூப்பர்.படங்களை பார்த்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.


இதை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி எழுதினால் பல தொடர்களாக வந்து விடும் என்ற பயத்தினால் அதை வீடியோ வாக எடுத்து யுடியுப்- இல் ஏற்றி உள்ளேன்.பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.


****************************************

1. இதன் மூலமாக இதய துடிப்பு எண்ணிக்கை - நிமிடத்திற்கு
2. இரத்த அழுத்தம் ( Systolic & Diostolic )
3. இதயம் ரிதம் மாறி மாறி துடித்தால் அதற்கான எச்சரிக்கை
போன்றவற்றை எளிதில் அறியலாம்.

குறிப்பு : இதய சம்மந்தமான நோய் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் தயவு செய்து மருத்துவரை நாடியே உங்கள் நாடியை தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர இது மாதிரியான "நமக்கு நாமே திட்டத்தை" உபயோகிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

****************************************
இக்கருவியை யாரெல்லாம் உபயோகிக்கலாம் ?

1. விஜய் காந்த் முதல்.. விஜய் படம் வரை... பின் விளைவுகள் அறியாமல் தவறாது பார்த்து விடுபவர்கள் இந்த மாதிரியான கருவிகளை கையோடு கொண்டு போனால் படத்தின் இடை இடையே தத்தம் நாடியை சரி பார்த்துக்கொள்ளலாம்.

2. என்னை மாதிரியான ஆர்வ முதிர்ச்சியால் எழுதப்படும் இந்த மாதிரியான் மொக்கை பதிவுகளை படிக்கும் போது எவ்வளவு கடுப்பு ஆகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தலாம்

3. இந்த மாதிரி எல்லாம் கருவிகள் வந்துருக்கா.. என்று என்னை மாதிரி எக்ஸ்பெரிமென்ட் பண்றவங்களும் ட்ரை பண்ணி பாக்கலாம்

நன்றி வணக்கம் !







Read more...

இலவச இதய அறுவை சிகிச்சை - குழந்தைகளுக்காக !

இது
பற்றிய விவரங்களை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிந்து கொள்ளவும்.
கீழுள்ள படத்தினை பெரிதாக்கி மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளவும்.




நீங்கள் உங்களுக்கு தெரியாமலேயே முகம் பேர் தெரியாத யாரோ ஒருவருக்கு உதவி செய்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.


Sri Sathya Sai Institute of Higher Medical Sciences EPIP Area,



Whitefield,


Bangalore 560 066,


Karnataka , INDIA .


Call us :


Telephone: +91- 080- 28411500 Fax +91 - 080- 28411502


Employment related +91- 080- 28411500 Ext. 415




நன்றி . வணக்கம்

Read more...

HDFC- வசனத்த மாத்துங்கடா டோய் ...

நண்பர்களே ..
இந்த பதிவை படிக்கும் முன் கீழே உள்ள லோகோவை ஒரு முறை உத்து பார்த்துட்டு அப்புறமா படிக்க ஆரம்பிங்க !











எல்லாம் என் நேரம் .... போட்ட கணக்கெல்லாம் தப்பா போச்சு!
பணம் வரும் என்று எதிர்பார்த்த எல்லா வழிகளிலும் நயா பைசா பெயராததால் கையை பிசைந்து கொண்டிருந்தேன்.

இன்னும் பத்து நாட்களில் பணத்தை புரட்டியாகவேண்டிய நிலை
முதல முதலாய் முடியாதோ என்கிற பயம் மனதில் எட்டி பார்த்தது.

என்ன பண்றதுன்னே தெரியல ..இருந்தாலும் மனதில் ஒரு அசட்டு தைரியம் ...எப்பாடு பட்டாவது பணத்தை செட்டில் பண்ணி சொன்ன வாக்கை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம்.

"இந்த பேங்க் காரனுங்கதான் ஒரு நாளைக்கு மூணு முறை "பர்சனல் லோன் தரேன் ..பர்சனல் லோன் தரேன் ன்னு கூப்பாடு போட்டு போனில் தொந்தரவு பண்ரானுங்களே ..அவனுகள கேட்டு பார்த்தா என்ன ?"

மனம் நினைத்ததும் நினைவுகள் இனித்தது..

எவ்வளவு வட்டி இருந்தாலும் சரி இப்போதைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது தான் முக்கியம் ..மத்த அப்புறம் பார்த்துக்கலாம் என எனக்கு நானே அறிவுரை (?)சொல்லிக்கொண்டு "HDFC Customer care " க்கு போன் பண்ணினேன்.


"இந்த மாதிரி... எனக்கு அர்ஜெண்டா பணம் தேவை படுது ... அதான் என்னமோ "Cash on Call " அப்படின்னு ஒண்ணு இருக்காமே.. அதன் மூலமா எனக்கு இவ்வளவு பணம் ஏற்பாடு பண்ண முடியுமா" என்று கேட்டேன்.

"சிம்புள் மேட்டரு நீங்க வைச்சிருக்குற கிரெடிட் கார்டுக்கு நீங்க கேட்டதுக்கு மேலேயே கிடைக்கும்" பதில் வந்தது.

"பணம் கிடைக்கும் என்றதுமே இதயம் நெகிழ்ந்தது! நெஞ்சம் இனித்தது! "


" வட்டி விகிதம் 22%.. நாங்க உங்க ரிக்வெஸ்ட்-ஐ ப்ராசெஸ் பண்றேன். நாலு நாள் கழித்து நாங்களே போன் பண்றோம்" அப்படின்னு ஒரு கடைசி பிட்ட போட்டா.. HDFC கஸ்டமர் கால் சென்டர் காரி !

நாலு நாள் வரை காலும் வரல கையும் வரல ... எனக்கு இங்க கையும் ஓடல காலும் ஓடல ...


சும்மா இருக்குபோதேல்லாம் சும்மா சும்மா போன் பண்ணி வேணுமா... வேணுமானு கேப்பானுங்க ..
இப்ப வேணும்ன்ற போது வக்காளி... ஒருத்தனும் போன் பண்ணலையேன்னு என்று மனம் மறுபடியும் கவலை பட்டது ..

"நாயின்னாவே நாக்குலதான் நக்கித்தான் தண்ணி குடிக்கணும் ...

பணம்னாலே மானத்தை விட்டுத்தான் கேட்கனும்னு"


ரெண்டாவது முறையா போன் பண்ணா .."Your request is still on Process" இன்னிக்கி சாயந்தரத்துக்குள்ள சொல்லிடறேன் அப்படின்ன்றாங்க!

சாயந்தரமும் போச்சு அதுக்க அடுத்த நாள் சாயந்தரமும் போச்சி ...தப்பான களத்துல விளையாடுரமொன்னு லைட்டா ஒரு டவுட் வந்துச்சி.


இப்படியே மறுபடி மறுபடி காலையிலும் மாலையிலும் "கஸ்டமர் கால் சென்டர்"க்கு போன் பண்ணி பண்ணி இத்தன நாள் சேர்த்தி வச்சிருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போனதுதான் மிச்சம்.

கடைசி வரைக்கும் request is still on Process..request is still on Process" ன்னு சொல்லியே ஒரு வாரத்தை கழிச்சுட்டாங்க...

இனிமே என் பேச்ச நானே கேட்க மாட்டேன் ..

( அவ்வளவு கேவலமா இருக்கும் )

நான் தனி ஆளு இல்ல ...எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு!
( என்னை பின் தொடரும் 24 தமிழ் பதிவர்கள் !)

அப்படின்னு மனசுக்குள்ளேயே பன்ச் டயலாக் விட்டுகிட்டு கடைசி முறையா போன் பண்ணி ...

"இல்ல,, தெரியாமத்தான் கேட்கிறேன்.. "Cash on Call " ன்றது அர்ஜெண்டா பணம் தேவைபடுறவன் கேட்கற விஷயம் ..
இதுக்கே ஒரு வாரம் இழுத்தடிசிங்கன்னா அந்த ஸ்கீமுக்கே மீனிங் இல்லையே ?

தரேன்னா தரேன்னு சொல்லணும் இல்லன்னா தரமாட்டேன்னு சொல்லணும் ...
அத விட்டுட்டு ..தருவோம்ம்..ஆனா தரமாடோம்ம்னு ராங்கா பேசினா என்ன நியாயம் ?

என்னா என்கிட்டேயே விளையாட்டு காட்ரீங்களா? ..


அப்படின்னு ஒரு பிடி பிடிச்சதும் அந்த பொண்ணு "ஒரு நிமிடம் லைன்ல இருங்க சார் " சொல்லிட்டு வேற யார்கிட்டயோ டிஸ்கஸ் பண்ணி " சார் உங்களுக்கு லோன் இன்னும் அப்ப்ரூவ் ஆகல ஸ்டில் ஆன் த ப்ராசஸ் " அப்படின்னா பாருங்க ....

எனக்கு வந்ததே கோபம் ...கண்ணு மண்ணு தெரியாத கோபத்துல ...எனக்கு பணமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்னு தமிழ்ல அந்த ஹிந்தி கார பொண்ணுக்கிட்ட கத்தி திட்டிட்டு சட்டென கையிலிருந்த கிரெடிட் கார்டை உடைச்சி போட்டுட்டு பட்டுன்னு போனை கட் பண்ணிட்டேன்.


அந்த கடுப்புல கார்டில் இருந்த "HDFC LOGO" கண்ணுல பட்டதும் எனக்கு தோணிய விசயத்தை நீங்களே கீழே பாருங்க.

குறிப்பு : கடைசி வரை என் பீலிங் ஐ புரிசுக்கவே மாட்டேனென்ற "HDFC Bank" கிற்கு அரை பதிவும் ...



என் கஷ்டத்தை எல்லாம் புரிஞ்சிக்கிட்டு கடைசி வரை போராடியும் பணமே தராம அட்வைஸ் மட்டுமே குடுத்துட்டு அலேக்கா எஸ்கேப் ஆன என் நண்பர் சரவணனுக்கு மீதியுள்ள அரை பதிவும் சமர்ப்பணம்.





Read more...

மேகம் கருக்குது மழை வர மாட்டேங்குது!

மக்களும்
எத்தன நாட்களுக்குத்தான் பொறுமையா இருப்பாங்க .... எனக்கு தெரிச்சவங்க எல்லோருமே எதாவது ஒரு வகையிலாவது அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்தீட்டாங்க ..இந்த பாழா போன மழை இன்னும் வரலயேன்னு!





கல்யாணத்துக்கு தேதி குறிச்ச ( ஜூன் ஏழு ) மாதிரி போன மாசமே மழை வருமென்று எதிர்பார்த்தும் இன்னும் வராம இருப்பதனால் மக்கள் எல்லாம் கடுப்பில் இருக்கிறார்கள்.

நான் இருக்கும் ஊருல இன்னும் பதினைந்து நாட்களுக்குத்தான் தண்ணீர் இருக்குமாம். அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் சங்குதான் ....

எங்க கம்பெனிக்கு பக்கத்துல இருக்கிற ஒரு கம்பெனில பத்து நாளைக்கு லீவு விட்டுட்டாங்க (அது ஒரு மருந்து கம்பெனி)..
அவனவன் "ரிசசன்" காரணமா ஊத்தி மூடிக்கிட்டு இருக்கும் போது இந்த கம்பெனி என்னடான்னா தண்ணீர் காரணமா லீவு விட்டிருக்காங்க !)


கடந்த இரு வாரமாக மேகங்களெல்லாம திரண்டு வரும் ...வானம் இருண்டு போகும் ..குளிர்ந்த காற்று அடிக்கும் சிறு தூறல் போடும் ..மக்களெல்லாம் மகிழ்ச்சியில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்குபோதே எங்கதான் போகுமோ தெரியிலேங்க ... எல்லாமே காணாம போய் சூரியன் நம்மள பார்த்து ஈயின்னு இளிப்பான் !





"நாம்தான் மத்தவங்களுக்கு தண்ணி காட்டுவோம் இப்போ மழையே
நமக்கு தண்ணி காட்டுது" என்ன கொடுமை இது கடவுளே ?

உண்ணாவிரதம் இருந்தா மழை விட்டு தூவானம் மட்டும் இருக்குமாம்.
இப்ப தூவானம் மட்டும்தான் இருக்கு மழைய காணோம் இதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சி சொல்லுங்க மக்களே .....

குறிப்பு : ஒவ்வொரு பகுதியிலும் மழை வரும் காலம் மாறுபடும். இந்த பதிவு மும்பை மற்றும் பூனே பகுதியை சார்ந்து எழுதப்பட்டது.

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP