நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படும் போது ...(அனைவரிடமும் பகிரவேண்டிய விடயம்!)

நண்பர்களே
இன்று நான் அறிந்து கொண்ட ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நம் நாட்டில் எத்தனையோ ரத்த வங்கிகள் இருப்பினும் தேவைபடுவோர் அனைவருக்கும் சரியான நேரங்களில் இரத்தம் கிடைப்பதில்லை. இதை நாமும் பல்வேறு சமயங்களில் ஏதாவது ஒரு வகையில் கேள்வி பட்டிருப்போம்.

நோயாளிகளுக்கு இரத்தம் தேவை படும்பொழுது அருகாமையிலுள்ள இரத்த வங்கியை தொடர்பு கொள்வோம். இரத்த இருப்பு அங்கு இல்லை எனில் நமக்கு தெரிந்தவர்களிடமும் உறவினர்களிடமும் விசாரிப்போம்.


அந்த மாதிர்யான சமயங்களில் கீழே உள்ள விடயத்தையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.

1. 9600097000 என்ற எண்ணுக்கு "BLOOD <தேவைப்படும் இரத்த வகை> " SMS செய்யுங்கள்.

2. இரத்த வழங்கி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.
( இதுவும் இரத்த வங்கியிடம் இருந்து பெறப்படும் தகவல்தான்)

இது எங்கள் அலுவலகத்தில் மனித வள துறையில் இருந்த வந்த மின் மடல். (Forward mail)



மேலும் இதை பற்றிய நம்பகத்தன்மைக்கு கூகிள்-ல் SMS 9600097000 என்று தேடிய பொது இவ்விடயம் பல்வேறு இடங்களிலும் அதிகாரபூர்வமாக பகிரப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ஆகவே .. நண்பர்களே இன்று யாரோ ஒருவருக்கு தேவைப்படும் இந்த விடயம் நாளை உங்களுக்கே கூட உதவலாம் ..அதனால் தயை கூர்ந்து இந்த விடயத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்



Please Share this information
as many as Possible!



நன்றி வணக்கம் .

யூர்கன் க்ருகியர்  – (14 ஜூலை, 2009 அன்று PM 6:02)  

// ரெட்மகி said...
good article.. thanks
//

Thanks for coming Redmagi

THANGAMANI  – (14 ஜூலை, 2009 அன்று PM 7:30)  

பயனுள்ள நல்ல தகவல்.நன்றி.

டவுசர் பாண்டி  – (14 ஜூலை, 2009 அன்று PM 9:51)  

இன்னாது !! ரத்தம் எடுக்க போறாங்களா ?? நல்லா தான் கீது பா !! மேட்டரு ,
எதுனா அர்ஜீன்ட்டுக்கு உதெவும்,

டவுசர் பாண்டி  – (14 ஜூலை, 2009 அன்று PM 9:54)  

அப்பால , நம்ப வேலன் வாஜார் கேட்ட கேட்டியே ஒரு சாப்ட்டு வேரு , அதாம்பா எக்ஸ்செல்லு பாண்டு பதிலா .. அக்காங் !! ரவ அங்க போய் பாரு நைனா !!

வேலன்.  – (15 ஜூலை, 2009 அன்று AM 7:26)  

தங்களது பதிவுகளில் விழிப்புணர்வு தென்படுகின்றது...தொடர்ந்து மக்களை விழிப்புணர்வு செய்யும் கட்டுரைகளை வெளியிடுங்கள்....

வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்  – (15 ஜூலை, 2009 அன்று AM 9:10)  

//THANGAMANI said...
பயனுள்ள நல்ல தகவல்.நன்றி.
//

கருத்துக்கு ரொம்ப நன்றி தங்கமணி !

யூர்கன் க்ருகியர்  – (15 ஜூலை, 2009 அன்று AM 9:10)  

// டவுசர் பாண்டி. said...
இன்னாது !! ரத்தம் எடுக்க போறாங்களா ?? நல்லா தான் கீது பா !! மேட்டரு ,
எதுனா அர்ஜீன்ட்டுக்கு உதெவும்,
//

சரியா சொன்னீங்க சார்

யூர்கன் க்ருகியர்  – (15 ஜூலை, 2009 அன்று AM 9:12)  

//அப்பால , நம்ப வேலன் வாஜார் கேட்ட கேட்டியே ஒரு சாப்ட்டு வேரு , அதாம்பா எக்ஸ்செல்லு பாண்டு பதிலா .. அக்காங் !! ரவ அங்க போய் பாரு நைனா !!//



உங்க பதில பார்த்து சிரிப்பு அடக்க முடியல சார்.

ரொம்ப டேங்க்ஸ் sir.

யூர்கன் க்ருகியர்  – (15 ஜூலை, 2009 அன்று AM 9:13)  

//தங்களது பதிவுகளில் விழிப்புணர்வு தென்படுகின்றது...தொடர்ந்து மக்களை விழிப்புணர்வு செய்யும் கட்டுரைகளை வெளியிடுங்கள்....
//

தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி வேலன் சார்

geevanathy  – (15 ஜூலை, 2009 அன்று PM 7:43)  

நல்லதொரு தகவல் பலருக்கு உதவும்

யூர்கன் க்ருகியர்  – (15 ஜூலை, 2009 அன்று PM 9:53)  

//த.ஜீவராஜ் said...
நல்லதொரு தகவல் பலருக்கு உதவும்
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP