சிங்கு ஊதிய சங்கு .......

மூவாயிரம் மைல்-க்கு அந்தப்பக்கம் முப்பது பேர் காயம் பட்டதுக்கே பஸ் கண்ணாடி எல்லாம் உடைத்து மதிய அரசின் கவனத்தை ஈர்த்தனர் சீக்கியர்கள் - நேற்றிரவு செய்தி பஞ்சாபில் !

மேலும்

ஆறு பஸ்களை அடித்து நொறுக்கப்பட்டது!

ஒரு பெரிய டிரக் மற்றும் எ டி எம் சென்டர் தீக்கிரையாக்கப்பட்டது!

நேசனல் ஹை வே -1 மறிக்கப்பட்டது!

ஜலந்தர் கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன் தாக்கப்பட்டது!

இரண்டு எக்ஸ்பிரஸ் டிரைன்கள் நிறுத்தப்பட்டது!

பஞ்சாப் முதலமைச்சர் "அமைதி" "அமைதி" என்று அலறிக்கொண்டிருக்கிறார்.
மொத்தத்தில் ஜலந்தர் நகரமே இப்போது அண்டர் கர்ப்யு!!











முப்பது மைல்-க்கு இந்தப்பக்கம் இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தும் கவலையே இல்லாமல் நேற்றிரவு ஐ பி எல் - ல் ஐக்கியமாயினர் பெரும்பாலான தமிழ்நாடு மக்கள்.


என்ன ஆச்சரியம் ...... ஒரே நாட்டுல இருக்கிற ரெண்டு மாநிலங்களுக்கு இவ்வளவு வித்தியாசமா?

அங்கன்னா மட்டும் கர்ப்யு ...இங்கன்னா காப்பா? என்னவோ போங்க !



பஞ்சாப் விசயத்தில் இப்ப நம்ம நாட்டு வெளிக்கி.. சாரி வெளிஉறவுத்துறை அமைச்சர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்! (?!)

vasu balaji  – (25 மே, 2009 அன்று PM 5:33)  

அவங்களுக்கு ஆஸ்திரியான்னாலும் அன்டார்டிகான்னாலும் ஒரே சிங்குதான். எவன தொட்டாலும் சங்குதான். நம்மள மாதிரி கர்நாடகத் தமிழன், ஆந்திரத் தமிழன், ஈழத் தமிழன்னா இருக்கானுவ.

யூர்கன் க்ருகியர்  – (25 மே, 2009 அன்று PM 6:03)  

கருத்துக்கு மிக்க நன்றி திரு பாலா அவர்களே !

Suresh Kumar  – (25 மே, 2009 அன்று PM 6:30)  

தமிழன் சுயநலவாதியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது

Tech Shankar  – (25 மே, 2009 அன்று PM 11:33)  

இவங்க எப்பவுமே இப்படித்தான். இன்னைக்கு நேத்தா?

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP